முருகனை நம்பிய பக்தர் கடலில் மூழ்கி பலி!

1 Min Read

தூத்துக்குடி, மே 23– தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலின் முன் இருந்த கடலில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலியானார்.
வைகாசி விசாகத்தன்று முருகனை தரிசித்தால் பலன் கிடைக்கும். வேண் டிய வரம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கை வைத்து முருகன் கோயில்க ளில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.
அந்த வகையில் முருகனின் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரம ணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் இன்று (23.5.2024) நடைபெறு கிறது.

இந்த நன்னாளில் முருகனை தரிசிக்க பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோயில் முன் இருந்த கடல் பகுதியில் பக்தர் ஒருவர் குளித்துக் கொண்டி ருந்தார். அப்போது பெரும் அலையில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வகனி என்ற இளைஞர் என தெரியவந்தது.
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அது போல் கடந்த வாரம் கள்ளக் கடல் நிகழ்வின் போது பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *