தலைநகர் டில்லியில் காற்று மாசு சற்று குறைந்தது முக்கிய பொருட்களைக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் அனுமதி

1 Min Read

புதுடில்லி, நவ.20 தலைநகர் டில்லியில் காற்றின் தரக்குறியீடு 290 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால் காற்றின் தரம் ‘மிக மோசமான பிரிவு’ என்ற நிலையில் இருந்து ‘மோசமான பிரிவு’ என்ற அளவிற்கு சற்று மேம்பட்டுள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காற்று மாசு காரணமாக டில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசர கால நடவடிக்கைகளை திரும்பப் பெறுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து டில்லியில் முக்கியமான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிமாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் டில்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள், சுரங்கப் பணிகள், டீசல் ஜெனரேட்டர்களுக்கான தடை உள்ளிட்ட மற்ற அனைத்து தடைகளும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *