புதுடில்லி, மே 22- பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் காலம் தாழ்த்துவது ஏன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பா.ஜ.க. பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர் கள், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்று கூறியிருந்தார்.
இதனைதொடர்ந்து மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட் டுள்ள ப.சிதம்பரம், ராஜஸ்தானில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக அளிக்கப் பட்ட புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையர் ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருப்பது ஏன் என்றும், பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க பாக்கி உள்ள 2 கட்டத் தேர்தலும் நிறைவடை யட்டும் என தேர்தல் ஆணையம் காத்திருக் கிறதோ என தனக்கு சந்தேகம் உள்ள தாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை சிலர் முன் மாதிரியாக கொண்டுள்ளனர்.
ஆனால், அனைவரும் அப்படி இருப்பதில்லை என்றும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.