சென்னை பிராட்வே-யில் ரூபாய் 823 கோடியில் பல அடுக்கு பேருந்து முனையம்

viduthalai
2 Min Read

சென்னை, மே 22- பிராட்வேயில் ரூ.823 கோடியில் மல்டி மாடல் பேருந்து முனையம் எப்படி அமைகிறது என் பதை விளக்கும் மாதிரி வடிவ புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன.

சென்னையின் மிகப் பழமையான பேருந்து நிலையம் பிராட்வே பேருந்து நிலையமாகும். முன்பு தென் மாவட்டங் கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கான பேருந் துகள் இங்கிருந்தே இயக்கப்பட்டன.

அதன்பின் 2002இ-ல் கோயம்பேடுக்கு தொலைதூர பேருந்து கள் மட்டும் மாற்றப்பட் டன. இதையடுத்து, மாநகர பேருந்துகள் மட்டும் பிராட்வேயில் இருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் மிக வும் மோசமான நிலை யில் இருப்பதை கருத்தில் கொண்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட் டது.

இதையடுத்து, கடந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ‘பிராட்வே யில் ரூ.823 கோடியில் நவீன வசதிகள் கொண்ட மல்டி மாடல் பேருந்து முனையம் கட்டப்படும்’’ என அறிவித்தார்.

மேலும், பேருந்து நிலையம், அருகில் உள்ள குறளகத்தையும் இடித்து, புதிய மல்டிமாடல் இன் டகரேசன் என்ற ஒருங் கிணைந்த போக்குவரத்து முனையம், பன்னடுக்கு வணிக வளாகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படு கிறது. சென்னை மாநகராட்சி சார்பில் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி  தற்போ தைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் மற் றும் 9 தளங்கள் கொண்ட வணிக வளாகமும் அமை கிறது. குறளகம் இடிக்கப் பட்டு அதிலும் 10 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப் பட உள்ளது.

புதிய பேருந்து நிலைய கட்டடத்தில் 2 தளங்கள் பேருந்துகளுக்காக ஒதுக்கப் பட உள்ளன. இதையடுத்து, விரைவில் பேருந்து நிலை யத்தை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், தற் போது பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டடங்களுக்கான மாதிரி வடிவ புகைப்படம் வெளியாகி யுள்ளது.
பாரம்பரிய கட்டடக் கலை மற்றும் நவீன கட்ட டக்கலை பாணியில் வெளி யாகியுள்ள இதில் ஏதே னும் ஒன்றை தேர்வு செய்து அதன் அடிப்படையில் பேருந்து முனைய பணிகள் நடைபெறும் என தலை மைச் செயலக வட்டா ரங்கள் தெரிவித்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *