சண்டிகர், மே 22 பஞ்சாப் மற்றும் அரியானாவில் விவசாயிகள் தங்க ளது கிராமத்திற்குள் பா.ஜ.க வேட் பாளர்கள் நுழைய தடை விதித்துள் ளனர்.
பஞ்சாப் போன்ற வடமாநிலங் களில் இறுதிக்கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர் தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் பா.ஜ.க வேட் பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று விவசாயிகள் அறிவிப்பு பலகை வைத்திருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டில்லி சென்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால், ஒன்றிய அரசு எல்லையில் ராட்சத தடுப்புகளை அமைத்து விவசாயிகள் டில்லிக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டது. அந்த கோபம் இன்னும் பஞ்சாப் மற்றும் அரி யானா விவசாயிகளிடமிருந்து கொண்டிருக்கிறது. இதனால் ‘டில்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாத பா.ஜ.கவிற்கு இங்கு வர தடை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிப்பு பலகை எழுதி கிரா மங்களில் தொங்க விட்டுள்ளனர்.
அரியானாவில் 60-க்கும் மேற் பட்ட கிராமங்களில் இது போன்ற அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் உதவியுடன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின் றனர். ஆனால், ஜாட் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங் களில் பா.ஜ.க வேட்பாளர்களை உள்ளே விடும் விவகாரத்தில் கிராம மக்கள் சமரசம் செய்து கொள்ள மறுக்கின்றனர். சவுதாலா குடும்பத் தினரைக்கூட உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். கடந்த வாரம் ஹிசார் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கிராமம் ஒன்றுக்கு சவுதாலாவின் மகன் அஜய் சிங் தனது மனைவி நைனா சவுதாலா மற்றும் மகனுடன் சென்ற போது அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர்.
மேனாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹோடா விவசாயிகளை தூண்டிவிட்டு பா.ஜ.க வேட்பாளர் களை கிராமத்திற்குள் அனுமதிக்க மறுப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி இருக்கிறது.
இது குறித்து பூபிந்தர் சிங் ஹோடா கூறுகையில், ”மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருக்கின்றனர். விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க பா.ஜ.க தவறிவிட்டது. அரியானாவை பா.ஜ.க பின்னோக்கி கொண்டு சென்று விட்டது. அரி யானாவில் தான் நாட்டிலேயே அதிக பட்சமாக வேலையில்லா திண் டாட்டம் நிலவுகிறது” என்றார்.
அரியானா மட்டுமல்லாது பஞ்சாப்பில் இதைவிட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதனால், பா.ஜ.க வேட்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்.