எந்த பொந்தில் எந்த பாம்போ ?

1 Min Read

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கூற்று – பணி நிறைவு விழாவில் நான் ஒரு ஆர். எஸ். எஸ். உறுப்பினர் என்றார்
கொல்கத்தா, மே.21- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று (20.5.2024) ஓய்வு பெற்றார்.அவருக்கு சக நீதிபதிகள், வழக்குரைஞர்கள் இணைந்து பணி நிறைவு விழா நடத்தினர். இதில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் பேசும்போது, ‘நான் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொண்டாக வேண்டும். எனது குழந்தைப் பருவம் முதல் இளமைப்பருவம் வரை அங்கே இருந்தேன். அந்த அமைப்புக்கு நான் நிறைய  கடன்பட்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஆனால், தனது பணி  நிமித்தமாக 37 ஆண்டுகள் அமைப்பை விட்டு விலகி இருந்ததாக கூறிய சித்தரஞ்சன்தாஸ், எனினும் அமைப்புக்கு திரும்பத் தயாராக இருப்பதாகவும், எந்த உதவிக்காகவும் அவர்கள் அழைத்தால் சென்று அவர்கள் வழங்கும் பணியை செய்வேன் என்றும் தெரிவித்தார்.மேலும் அவர், ‘எனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தினேன். அது செல்வந்தரோ, இடதுசாரியா, காங்கிரசோ, பா.ஜனதாவோ அல்லது திரிணாமுல் காங்கிரசோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டேன்’ என்றும் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *