கொல்கத்தா, மே 21- தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக சார்பில் அவதூறு விளம்பரங்கள் வெளியிடு வதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கு நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா அமர்வில் நேற்று (20.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக விளம்பரங்கள் வெளியிடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பாஜகவின் விளம் பரங்கள் உள்ளன. பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நட வடிக்கைகள் போதுமானதல்ல. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடு பவர்கள் மீது அவதூறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. தேர்தல் விளம் பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் பத்திரிகைகள் பிர சுரிக்கக்கூடாது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறை களுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல் பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.