அய்ந்தாம் கட்ட தேர்தலில் 60.48% வாக்குகள் பதிவு

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 21 மக்களவைத் தேர்தலிலின் 5 ஆம் கட்ட வாக் குகள் பதிவு மீண்டும் குறைவு 60.48% வாக்குகளே பதிவாகி யுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கன மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நேற்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது;

உத்தரபிரதேசம் (14 தொகு திகள்), மகாராட்டிரா (13 தொகு திகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகு திகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க் கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடை பெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறை வடைந் தது. வாக்காளர்கள் நீண்ட வரிசை யில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். தேர்தல் ஆணை யம் 5 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள் ளது. அதிகபட்சமாக மேற்குவங் காளத்தில் 76.05 சதவீத வாக்கு களும், குறைந்தபட்சமாக மகா ராட்டிராவில் 54.33 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *