கையால் ஆகாத கடவுள் சென்னை தியாகராயர் நகர் அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருட்டு – வட மாநில ஊழியர் கைது!

1 Min Read

சென்னை, மே 21- தியாகராயர் நகரில் உள்ள அயக்கிரீவர் கோயிலில் 20 பவுன் நகை திருடப் பட்டுள்ளது. இதுகுறித்து வட மாநில ஊழியரை காவல் துறை யினர் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராயர் நகர் இராகவய்யா சாலையில் அயக் கிரீவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சிலைக்கு அணி விக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த 19.4.2024 அன்று திருடப்பட்டன. இது குறித்து கோயில் அறக் கட்டளை மேலா ளர் மதுசூதன் பட் அளித்த புகா ரின்பேரில் சவுந்தரபாண்டியனார் அங்காடி காவல் துறையினர் வழக் குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

கோயிலில் இருந்த கண்கா ணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, கோயிலில் சமையல் உதவியாளராக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தினகர் திரிபாதி (25), இந்த நகைகளை திருடியது தெரிய வந்தது.

விசாரணையில், கடந்த 14.4.2024 அன்று கோயிலில் சமையல் உதவியாளராக பணிக்கு சேர்ந்த அவர் 19.4.2024 அன்று தேர்தல் என்பதால், கோயிலில் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி நகை களைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து தினகர் திரிபா தியை தேடிவந்த காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *