மதுரவாயல், மே 21 ஆவடி மாவட்ட மதுரவாயல் கழக சார்பில் ” சுயமரி யாதை இயக்கம்” மற்றும் “குடி அரசு” இதழ் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் 18-5-2024 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு மதுர வாயல் பகுதி கழக அமைப்பாளர் கு.சந்திரசேகர் வரவேற்புடன் மதுர வாயல் பகுதி தலைவர் சு.வேல்சாமி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக நாத்திகன் வழங்கிய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
பின்னர் தோழர் தமிழன் காசி ஒருங்கிணைப்பில் தஞ்சை.இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செய லாளர் சோ.சுரேஷ், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், சனார்த் தனன் ஆகியோர் சிறப்புரை ஆற் றினர்.
நிகழ்வில், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவர சன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணை செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், திராவிடர் கழக தொழி லாளரணி ஆவடி மாவட்ட தலைவர் கி.ஏழுமலை,ஆவடி மாவட்ட மகளி ரணி தலைவர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், ஆவடி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சோபன் பாபு, செயலாளர் எ.கண்ணன், ஆவடி நகர தலைவர் கோ.முருகன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ், பூவிருந்தவல்லி பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், செயலாளர் தி.மணிமாறன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திகேயன், தென் சென்னை மாவட்ட துணை செய லாளர் அரும்பாக்கம் சா.தாமோ தரன், வடசென்னை மாவட்ட செய லாளர் அன்புச் செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், இளைஞரணி செயலாளர் அழகிரி (எ) நரேஷ் மற்றும் மகளிரணி தோழர்கள் திருநின்றவூர் ராணி ரகுபதி, ஆவடி எல்லம்மாள், அம் பத்தூர் சரோஜா, மதுரவாயல் ரேகா, காமாட்சி, உடுமலை வடிவேல், வை.கலையரசன், மு.பவானி, பெரி யார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், பூவிருந்தவல்லி பாலசந்தர், கன்னடபாளையம் தமி ழரசன், அமைந்தகரை மோகன், குன்றத்தூர் திருமலை, அரும்பாக்கம் வழக்குரைஞர் ராஜா, அம்பத்தூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத் தறிவு பாசறையின் ஒருங்கிணைப் பாளர் இரா.கோபால், மதுரவாயல் பகுதி தோழர்கள் தங்க.சரவணன், அண்ணா நிசார்,வடிவேல், ராஜா, சோமசுந்தரம், நவீன், பெரியார் பிஞ் சுகள் அறிவுச் செல்வி, அன்புச்செல் வன், செந்தமிழ் இனியா, சமிக்சா, ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பூவிருந்தவல்லி ஒன்றிய செயலாளர் சு.வெங்கடேசன் நன்றி கூறினார்.