வழக்குரைஞர் பி.வில்சன்
திமுக மாநிலங்களவை உறுப்பினர்
போதைப்பொருள் பணம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்கான 1998ஆம் ஆண்டின் அய்.நா பொதுச் சபையின் நோக்கத்திற்கு மாறாக, சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டம் 2002 (PMLA) வின் பயன்பாடு, அதிகாரங்களை அத்துமீறல் செய்வதாகவும், சாதாரண குற்றத்திற்கும் அதிகப் படியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அமலாக்க இயக்குநரகத்திற்கு வழங்குவதாவும் விமர்சிக்கப்படுகிறது.
2002 இல் இச்சட்டம் இயற்றப்பட்டது, போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம்(NDPS), இந்திய தண்டனை சட்டம் (IPC), ஒழுக்கக்கேடான நடவடிக்கை (தடுப்பு) சட்டம், ஆயுதச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய வற்றின் கீழ் அமைந்த குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகும். எனினும், தற்போதைய பட்டியல் ஏற்கெனவே தீர்வு உள்ள இந்தியாவின் அனைத்து தண்டனைச் சட்டத்தையும் உள்ளடக்கி, மாற்றியமைக்கப்பட்ட சட்டமாக மாறுகிறது.
புலனாய்வு அமைப்புகள், குற்றவியல் நடை முறைச் சட்டத்தின்படியே(CrPC) காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு, கட்டுப்பட வேண்டும். ஆனால் PMLA வின் கீழ், CrPC உட்பட எந்தவொரு அடிப்படைச் சட்டத்தின் படியும் நட வடிக்கை மேற்கொள்ளக்கூடிய காவல் துறையினர் அல்லாத அதிகாரிகள் முன்னுரிமை பெறுகிறார்கள். விஜய் மந்தன்லால் சவுத்ரி Vs யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வின் கருத்தை ஆயுதமாகக் கொண்டு, விசாரணையைத் தொடங்குவதற்கு முன் அடிப்படை அட்டவணை சட்டத்தின்படியான முதல் தகவல் அறிக்கைக்குக் காத்திருக்கவோ, விசாரணைக்கான காரணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கவோ அவசியம் ஏதும் இல்லாமல் அமலாக்கத்துறை செயல்படுகிறது.
விசாரணையின் தொடக்கம், வரவாணை (சம்மன்) அனுப்புதல், ஆகிய முறைமைகள் மட்டும் இந்தச் சட்டத்தில் காணப்படும் பாதகங்கள் இல்லை. மேலும் சில பாதங்கங்கள்:
• குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியின் முன் காவலில் வைக்கும் ஆணை பெறுவதற்கு கொண்டு வரப்படும்போது, கைதுக்கான காரணத்தை நீதி பதிக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் அமலாக்கத் துறைக்கு இல்லை.
• பிணை விண்ணப்பத்தைப் பரிசீலிக்க, கொடூரமான இரட்டைப் பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் காலவரையறையின்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.
•குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது மூன்றாம் நபர், ஆஜரின் போது அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் தருமாறு சிறைப்படுத்தப்பட்டு நிர்பந்திக்கப் படுவது எந்தப் பாதுகாப்பும் அற்றதாக உள்ளது.
• குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கையில், அதில் இல்லாத குற்றங்கள் மீது அதிகார வரம்புகளை அபகரித்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வது, அன்றாட வணிகம், வணிகப் பரிவர்த்தனைகளை ஸ்தம்பிக்க வைக்கும்.
• சாட்டப்பட்டுள்ள குற்றம் பற்றி விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
• விசாரணை முடியும் முன்பே சொத்துகளை இணைத்தல், கையகப்படுத்துதல்.
என்று இந்த அத்துமீறல் பட்டியல் மிக நீண்டது.
எந்த ஆதாரமும் இல்லாத வழக்குகளில், நியாயப் படுத்த முடியாத வகையில் குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு, மாதக்கணக்கில் விசாரணைக்கு முன்பே சிறையில் அடைக்கப்படுவது மிகுந்த கவலையை அளிக்கிறது. ஆதாரம் இல்லாத தால் குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் விடு விக்கப்பட்டால்?
தற்போதைய அரசாங்கம் அமலாக்கத்துறை அதி காரிகளை அரசியல் வேட்டையாட பயன்படுத்து வதாக குற்றம் சாட்டப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் தேர்தலுக்கு சற்று முன்பு கைது செய்யப்பட்டிருப்பது, அரசியல் அதிகாரத்தை தவறான நோக்கங்களுடன் மொத்தமாக அத்துமீறல் செய்வதற்கான அப்பட்ட மான எடுத்துக்காட்டுகளாகும். பல மாதங்கள் உறக்க நிலையில் இருந்துவிட்டு, இப்படிப்பட்ட காவலில் வைத்து விசாரணை செய்வது நிச்சயம் தேவை யற்றதே. தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தச் சட்டப்பூர்வ அதிகாரிகள், பொய் வழக்குகள் போட்டதற்காக அதே சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதற்குள், அதிகாரத்தில் இருக்கும் கட்சிக்கும், காவலில் வைக்கப்பட்ட நபருக்கும் ஏற்பட்ட சேதம், இந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எந்த தண்டனையினாலும் ஈடுசெய்ய முடியாதது. இந்தச் சட்டம் அமலாக்க இயக்குநரகத்திற்கு, இந்தி யாவில் பரந்த அதிகாரங்கள், அரசமைப்பு உத்தர வாதங்கள் மற்றும் PMLA என்ற கம்பளத்தின் கீழ் பாதுகாப்புகளுடன் கூடிய அதிகாரம் அளிக்கிறது என்று சொன்னால் மிகையல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசமைப்பு நீதிமன்றங்கள் உதவியற்ற நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருப்பதான குற்றச்சாட்டிற்கு ஆளாகி யுள்ளது.
மாநில அரசு அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து இரகசிய ஆவணங்களைக் கைப்பற்றவும், வானின் கீழுள்ள எவரையும் கைது செய்யவும், குற்றம் சாட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அரசுக்கு எதிராக சாட்சியளிக்க அதிகாரிகளை கட்டாயப் படுத்துவதற்கும், கூட்டாட்சிக் கொள்கைகள், தனிநபர் சுதந்திரம், அரசமைப்பு உத்திரவாதம் ஆகியவற்றைக் காற்றில் பறக்கவிட்டு அரசாங்க சொத்துகளில் சோதனை நடத்திடவும் தமக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக அமலாக்க இயக்குநரகம் கூறுகிறது.
PMLA தரும் அதிகாரங்களை, சில அதிகாரிகள் அத்துமீறல் செய்வதாக, பொதுக் களங்களில் கிடைக்கும் எண்ணற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கையூட்டுப் பெறுவதும், செல்வாக்கு பெற்றவர்களுக்கு நிலத்தை விற்க மறுக்கும் விவசாயிகளுக்கு வரவாணை அனுப்புவதும் இவற்றில் அடங்கும்.
அரசமைப்பு உத்திரவாதங்களைக் காத்திடவும், தனிநபர் துன்புறுத்தப்படுவதும் மற்றும் வணிக சமூகம், அரசியல் எதிரிகள் ஆகியோரிடம் பணம் பறிக்கும் கருவியாகப் பயன்படுத்தப் படுவதைத் தடுக்கவும், அமலாக்க இயக்குநரகத்தின் மாயையான, கட்டுப்பாடற்ற, தனிநபர் உரிமையில் அத்துமீறத்தக்க அதிகாரங்களின் காரணமாக, தற்போதுள்ள வரையரையற்ற PMLA உடனடியாக துல்லிய மறுசீரமைப்பு அல்லது மொத்தமாக ரத்து செய்யப்பட்டு, கொடிய சட்டமாவதைத் தவிர்ப்பது அவசியமாகிறது.
நன்றி: ‘முரசொலி’, 19.5.2024