முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறினால் லாலு பிரசாத் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டுமாம் அசாம் முதலமைச்சரின் மதவெறி தாண்டவம்

1 Min Read

பாட்னா, மே 19 அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று பீகாரின் சிவன் மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பீகார் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை கடுமையாக தாக்கி பேசினார்.
அவர் கூறுகையில்,
‘இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லாத போதும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் லாலு பிரசாத் யாதவுக்கு அவ்வளவு ஆர்வம் என்றால், அவர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். ஏனெனில இந்தியாவில் அது சாத்தியமில்லை’ என தெரிவித்தார்.
கருநாடகாவில் இதர பிற்படுத் தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டிய ஹிமந்தா, ஆந்திராவிலும் அந்த கட்சி ஆட்சியில் இருந்தபோது இதை அமல்படுத்தி யிருந்ததாக கூறினார்.
இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாகவும், காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *