அரியானாவில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக
டிராக்டர்களுடன் விவசாயிகள் போராட்டம்!
வீடு மற்றும் கட்சி அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர் பா.ஜ.க. வேட்பாளர்கள்
சண்டிகர், மே 19 பத்து மக்களவைத் தொகுதி களைக் கொண்ட அரியானா மாநிலத்தில் மே 25 அன்று (ஆறாம் கட்டம்) ஒரே கட்ட மாக வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், அம் மாநிலத்தில் “இந்தியா” கூட்டணி மட் டுமே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அரியானாவை ஆளும் பாஜக வேட்பாளர்களோ விவசாயிகளுக்கு பயந்து தேர்தல் பிரச்சாரக் களத்திலேயே இல்லாமல், வீடு மற்றும் கட்சி அலுவலகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பாஜக வேட்பாளர் கள் மட்டுமின்றி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரியானா மேனாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவரு மான மனோகர் லால் கட்டார் ஆகியோரும் பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளரான ரன்தீப் சிங் சவுதாலா தேர்தல் பிரச்சாரம் செய்த தேவா கிராமத்தில் டிராக்டர்களுடன் பேரணி நடத்திய விவ சாயிகளிடம் சிக்கி சிறைபிடிக்கப்பட்டார். “எங்களைத் தாக்கிவிட்டு, எதற்கு இங்கு வந்து பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான விவசாயி கள் டிராக் டர்களுடன் வட்டமடித்து கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டனர்.
மேலும் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக் கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் ஒன்றிய-மாநில பாஜக அரசுகளின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கை கள் குறித்து விவசாயிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். ஆனால், பாஜக வேட்பாளர் ரன்தீப் சிங் பதிலளிக்க மறுத்து விட்டார். காவல் துறையினரின் பேச்சுவார்த் தைக்குப் பின்னர் ரன்தீப் சிங் மாற்றுப் பாதையில் ஓட்டம் பிடித்தார்.
ஏற்கெனவே தயா கிராமத்திலும் ரன் தீப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளிடம் பகி ரங்கமாக மன்னிப்புக் கேட்டதன் மூலம் ரன்தீப் கிராமத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது.
கேரளாவைப் போல அரியானாவிலும் பாஜக பூஜ்ஜியத்தை பெறும்!
பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த விவசாயிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நிகழ்விடத்தின் சூழ் நிலைக்கு ஏற்ப பேரணி, முற்றுகை, டிராக்டர் பேரணி என வியூகம் அமைத்து பாஜகவை பந்தாடி வருகின்றனர். இதனால் பாஜக வேட் பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள முடியா மல் அடிமேல் அடி வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ரன்தீப்பிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த விவசாயி களின் தலைவர் சத்யதீப் கூறுகையில்,
“அரியானாவில் பாஜகவின் கதையை முடித்து விடுவோம். கேரளத்தைப் போல அரியானாவிலும் பாஜக வெல்லும் இடங் களின் எண்ணிக்கை பூஜ்ஜிய மாக இருக்கும்” என கூறினார்.
விவசாயிகள் தாக்கிவிடுவார்களோ? என்ற அச்சத்தில் அரியானாவில் ஒவ்வொரு பாஜக வேட்பாளர்களும், ஒரு மாநில முதலமைச்சருக்குக் கூட இல்லாத வகையில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச் சாரத்துக்குச் செல்கின்றனர். அவற்றில் 10 வாகனங்கள் காவல் துறையைச் சேர்ந்தவை என்ற நிலையில், பாஜக வேட்பாளர் சென்ற டைய வேண்டிய இடங்களுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே காவல்துறையினர் சென்றடைவர். எதிர்ப்பு இல்லாவிட்டால்தான் பாஜக வேட்பாளர் வருவாராம். இல்லையெ னில் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுமாம்.