ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் – பன்னாட்டு விதி மீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அய்க்கிய நாடுகள் மன்றம் அறிக்கை

viduthalai
1 Min Read

நியூயார்க், மே 18- 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப் போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட் டார் (தற்போது அவர் உயிரோடு இருப்ப தாக கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட் டரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது). பிரபாகரன் கொல் லப்பட்டார் என அறிவித்த இலங்கை ராணுவம் கூறியதுடன் ஈழ இறுதிப்போர் முடிவுக்கு வந்தது.

இந்த போரின்போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமி ழர்களை கொன்று குவித்ததாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாக வும் குற்றச்சாட்டு எழுந்தது. போருக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் வசித்த இடங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இளைஞர்களை பிடித்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் ஈழ இறுதிப்போர் தொடர்பாக அய்.நா. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசா ரணையை வேகப்படுத்த வேண்டும். போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர் பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர் பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியில் சீர்திருத்தங்களை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளில் நீடிக்க அனு மதிக்க கூடாது. தொடர்புடையவர்களை பெரிய பதவி களில் நியமிக்கவும் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *