லக்னோ, மே 18- ஒரு மாநி லத்தில் பள்ளிகள் மூடப்படுவதற்கு கார ணங்கள் பல உண்டு.
நிதிப்பற்றாக்குறை, அருகருகே பள்ளிகள் இருப்பதால் ஒரு பள்ளியில் மாணவர்கள் வருகைக் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை, கட்டுமானம் பழுது, இன்னும் பல காரணங்கள்
இவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் அல்லது மாநகராட்சிப் பள்ளிகள் என்றால் அவற்றை உடனடியாக சரிசெய்யத்தான் நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கு கின்றனர்.
தனியார் நிர்வாகிக்கும் பள்ளி கள் மூடுவதற்கு அரசு பொறுப் பாகாது. அதனால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி வழங்கு வதற்கு அரசு முன்வரும்.
Unified District Information System for Education என்பது அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் என குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளைக் கூட கணக்கெடுக்கும் அமைப்பு ஆகும்.
இந்திராகாந்தியின் எமர் ஜென்சி காலகட்டத்தில் கல்வி பொதுவான ஒன்றாக மாற்றப் பட்டது. அதன் பிறகு பள்ளிக் கல்விகுறித்த கண்காணிப்பை மேற் கொள்ள பிறகு வந்த காங்கிரஸ் அரசால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஒன்றிய மனித வளத் துறை அமைச்சகத்தின் கீழ் வந்தது.
மோடி ஆட்சியின் கீழ் இந்த அமைப்பும் நிதிப்பற்றாக்குறையால் திண்டாடும் அமைப்பாக மாறி சில ஆண்டுகளாக எந்த ஒரு புதிய திட்டமும் இதனால் முன் வைக் கப்படவில்லை. அதற்கு பதில் அம்பானி கல்வி அறக்கட்டளை மூலம் இந்தியாவில் உள்ள அனைத் துப் பள்ளிகளுக்கு மேலாண்மை திட்டம் மேற்கொள்ள மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
புதிய கல்விக்கொள்கையில் தனியாருக்கு முக்கியத்துவம் அளித்து Unified District Information System for Education என்ற அமைப்பை வலுவில்லாத அமைப் பாக மாற்றிவிட்டனர்.
வெறும் புள்ளிவிவரக்கணக்கு களும் பல்வேறு அமைப்புகளில் செயல்பாடுகளுமே இந்த அமைப் பின் இணையதளத்தில் விரவிக் கிடக்கிறன.
இந்த அமைப்பின் ஆய்வில் தெரியவந்த ஒரு அதிர்ச்சி இந்தியா வின் பெரிய மாநில ம.பி. மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அதிக அளவு பள்ளிகள் இழுத்து மூடப் பட்டுள்ளன.
இந்த இரண்டு மாநிலங்களும் கல்வியில் மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் கடைசி இடங்களில் வரும், இதனால் அங்கு பள்ளிகள் அதிகம் திறந்திருக்கவேண்டும் ஆனால் இந்த இரண்டு மாநிலங்கள் தான் சுமார் 55 ஆயிரம் பள்ளிகளை இழுத்து மூடி உள்ளது.
சாமியார் ஆதித்யநாத் இரண் டாவது முறை முதலமைச்சராக உள்ளார் ‘மாமா’ என்று செல்லமாக பாஜகவினரால் அழைக்கப்பட்டு இன்று முகவரி இல்லாமல் போய் இருக்கும் சிவராஜ் சவுகான் 5 முறை முதலமைச்சராக இருந்து உள்ளார்.
பிறகு ஏன் இவர்கள் 55,000 பள்ளிகளை இழுத்து மூட வேண் டும் என்றால் “உட்கட்டமைப்பு சரியில்லை” என்ற ஒரு பதில் மட் டுமே வரும்.
அதை சரிசெய்யவேண்டியது தானே என்றால், “நிதி இல்லை” என்று அடுத்த பதில் வரும். ஏன் நிதி இல்லை என்றால், “வருவாய் சரிவு” என்று பதில் வரும் வருவாய் சரிவு என்றால், மற்ற எல்லா திட்டங்களுக்கும் ஒன்றிய அரசிட மும் வெளிநாட்டு வங்கிகளிலும் கடன் வாங்கிச்செய்யும் மாநில அரசுகள் மாநிலத்தின் வளர்ச்சி யின் அச்சாணிகளாக திகழும் பள்ளியை ஏன் கட்டமைக்க நிதி வாங்குவதில்லை என்றால், அதற் கான விடை தனியார் பள்ளிகள் பணம் இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்ற அவலத்தை பாஜக ஆளும் மாநிலங்களில் உருவாக்கி விட்டார்கள்.
இதனால் தான் அங்கு கடந்த 8 ஆண்டுகளாக கல்வியை பாதியில் விடுபவர்கள் பள்ளிக்கூடமே செல் லாமல் மிகக்குறைந்த வயதிலேயே பெருநகரங்களுக்கு கூலிவேலை செய்யச்செல்பவர்களாக அதிகம் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் மீரட், மொராதாபாத் ஜான்சி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரு நகரங் களில் மட்டுமே பள்ளிகள் உள் ளது. பேரூராட்சிகளில் பெயரள விற்கு ஆரம்பப்பள்ளிகள் உள்ளது.
அங்கு இரவு பெரும் செல்வந் தர்கள் சாப்பிட்டு விட்டு மீதமுள்ள ரொட்டிகளை வீட்டிற்கு முன்பு உள்ள தூண்களில் வைத்துவிடு வார்கள். பள்ளியில் வேலை செய் யும் ஆயாக்கள் அதை சேகரித்து பேரூராட்சி துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒரு ரொட்டி அதோடு தொட்டுக்க சிறிது உப்பு கொடுத்துவிட்டு ரொம்ப கெட்டியாக இருந்தால் குவளைத்தண்ணீரில் அதனை ஊறவைத்து சாப்பிடவேண்டும் அவ்வளவுதான்.
இந்த அவலத்தை படமெடுத்து வெளியிட்ட ஊடகவியலாளர் மீது தேசப்பாதுகாப்புச்சட்டம் பாய்ந் தது, அவ்வளவுதான் அதன் பிறகு உத்தரப்பிரதேசத்தின் கல்வி நிலை குறித்து யாருமே வாயைத் திறக்கவில்லை!