தந்தை பெரியார் பிறந்த நாள் விழா திருவரங்க பகுதி கழகக் கலந்துரையாடல்

1 Min Read

திருவரங்கம், செப். 6 –  திருச்சி திருவரங்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டத்துக் கான கலந்துரையாடல் கூட்டமாக திருவரங்கம் பெரியார் மய்யத்தில் திருவரங்க பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் 3.9.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 12 மணிக்கு திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவது, திருவரங்கம் திருவானைக் காவல் பகுதிகளில் 30க் கும் மேற்பட்ட கொடிக் கம்பங்களில் புதிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங் குவது எனவும், திருவரங் கம் தந்தை பெரியார் சிலையில் மாலை அணி வித்துவிட்டு அனைத்து தோழர்களும் திருச்சி மத் திய பேருந்து நிலையத் திற்கு சென்று மாலை அணிவித்து அனைத்து தோழர்களுடனும் திருவ ரங்கம் தந்தைபெரியார் சிலைக்கு வருவதெனவும், பெரியார் பிறந்த நாள் அன்று கொடிகள் ஏற் றப்படும்.

திருச்சி மாவட்ட தலைவர் ஞா ஆரோக்கிய ராஜ், திருச்சி மாவட்ட செயலாளர் இரா. மோகன் தாஸ், திருவரங்கப் பகுதி தலைவர் சா. கண்ணன், திருவரங்கப் பகுதி செய லாளர் இரா முருகன், திருவரங்கம் பகுதி தலைவர் த. அண்ணாதுரை, கே. முருகேசன், எஸ்.கலியபெருமாள் மற்றும் அப்பகுதி தோழர்களும் கலந்து கொண்டு பெரியார் பிறந்த நாளை மேளதா ளத்துடன், உற்சாகமாக சிறப்பாக கொண்டாடு வது என முடிவெடுக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *