மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது அகிலேஷ் கணிப்பு

1 Min Read

லக்னோ, மே 17- உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று (16.5.2024) டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கும். பா.ஜனதா 140 இடங்களை பிடிக்கக்கூட நாட்டின் 140 கோடி மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் எனக்கூறிய அகிலேஷ், பா.ஜனதாவின் இந்த நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும், எனவே மோடி அரசு வீட்டுக்குப் போவது உறுதியாகி விட் டது என்றும் தெரிவித்தார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, ஓய்வு பெறும் பா.ஜனதா தலைவர்கள் பொய்களை கூறுவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறப்பார்கள் என்றும் ஏனெனில் பொய்கள் கூறுவதில் அவர்கள் வல்லவர்கள் என்றும் அகிலேஷ் யாதவ் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *