மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது அகிலேஷ் கணிப்பு

viduthalai
1 Min Read

லக்னோ, மே 17- உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று (16.5.2024) டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாததாக இருக்கும். பா.ஜனதா 140 இடங்களை பிடிக்கக்கூட நாட்டின் 140 கோடி மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் எனக்கூறிய அகிலேஷ், பா.ஜனதாவின் இந்த நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டிருப்பதாகவும், எனவே மோடி அரசு வீட்டுக்குப் போவது உறுதியாகி விட் டது என்றும் தெரிவித்தார். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, ஓய்வு பெறும் பா.ஜனதா தலைவர்கள் பொய்களை கூறுவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறப்பார்கள் என்றும் ஏனெனில் பொய்கள் கூறுவதில் அவர்கள் வல்லவர்கள் என்றும் அகிலேஷ் யாதவ் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *