கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

6.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை எழுப்ப முடிவு.

👉ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை. இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா கொண்டு வர முடிவு என்ற தகவலால் பரபரப்பு

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுத்திட தமிழ் நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 ஜாதியின் கொடுமையை ஒப்புக் கொள்ளாமல் சனாதன தர்மத்தை பாதுகாப்பது தார்மீகப் போலித்தனம் என்கிறார் கட்டுரையாளர் பிரதாப் பானு மேத்தா.

தி ஹிந்து:

👉”இந்தியா” கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி டில்லியில் நடை பெற உள்ளது. உடனடி பணிகளுக்கான காலக் கெடுவை நிர்ணயிப்பது, தொகுதிகள் பகிர்வு, தொலைநோக்கு ஆவணம்-பொது அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் கூட்டுப் பிரச்சார பேரணிகளுக்கு தேதிகளை இறுதி செய்வது ஆகியவை அட்டவணையில் உள்ள நிகழ்ச்சி நிரலாகும்.

👉 ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ திட்டம், அற்பமான அடிப்படையில் முன்வைக்கப்பட்டது, அரசியல் ரீதியாக சாத்தியமற்றது, நிர்வாக ரீதியாக செயல்படுத்த முடியாது மற்றும் அரசமைப்பு ரீதியாக சாத்தியமற்றது என் கிறார்கள் கட்டுரையாளர்கள் சசி தரூர், எம்.பி, பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வு தலைவர்.

👉 இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்வதா?, இது வரலாற்றை சிதைக்கும் அப்பட்டமான முயற்சி என மம்தா கண்டனம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *