உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாத தாழ்த்தப்பட்ட சமூக இளைஞரைத் தாக்கும் காட்சிப்பதிவு: ராகுல் காந்தி வெளியிட்டு கடும் கண்டனம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, மே 17 உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இங்குள்ள ரேபரேலி தொகுதியில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தத் தொகுதியில் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடாமல் இருந்ததாகக் கூறி கடு மையாக தாக்கப்பட்டுள்ளார். பாரதீய ஜனதாவினர் அவர் மீது தாக்குதல் நடத்தும் காட்சிப் பதிவு வெளியாகி யுள்ளது.
நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப் பினரும், ரேபரேலி தொகுதி வேட் பாளருமான ராகுல் காந்தி இந்தக் காட்சிப் பதிவை பகிர்ந்துள்ளார்.

காட்சிப் பதிவை வெளியிட்ட ராகுல் காந்தி இது தொடர்பாக பாரதீய ஜனதாவைக் கடுமையாக சாடியுள்ளார்.
அவர் இது குறித்து தனது எக்ஸ் தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் இந்தக் காட்சிப் பதிவை பார்த்து இருக்கி றோம். இது வருத்தமாகவும், வேத னையாகவும் இருக்கிறது. கோப மாகவும் உணர்ந்தோம்.

எங்கள் நாட்டு மக்களுக்கு என்ன நடக்கிறது?
பாரதீய ஜனதா அரசு அரசமைப் புச் சட்ட உரிமைகளை அழிக்கிறது. காவி கட்சி அரசியல் அமைப்பை மாற்ற விரும்புகிறது. இட ஒதுக் கீட்டை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது.
மக்கள் எழுந்து நின்று அரச மைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். குடிமக்கள் முன் வரா விட்டால் ரேபரேலியில் நடந்தது போல உரிமைகள் பறிக் கப்பட்டு சுயமரியாதை நசுக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *