உ.பி. மாநிலத்தின் மதமாற்றத் தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

1 Min Read

புதுடில்லி, மே 17- உத்தரப்பிரதேச மாநிலத்தின் மத மாற்றத்தடை சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதி ரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதம் மாறுவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலகாபாத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராஜேந்திர பிகாரிலால், அதன் இயக்குநர் வினோத் பிகாரிலால் ஆகியோர் 90-க்கும் மேற்பட்ட வர்களை மதமாற்றியதாக குற்றம் சாட்டி உத்தரப்பிரதேசம் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு மதமாற்ற தடை சட்டம் அரசியல் சாசன பிரிவு 25க்கு எதிரானது என்று கூறினர்.
பின்னர், துணை வேந்தர் மற்றும் இயக்குநர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *