மதுரையில் குழந்தைகளுக்கான சமூக உரிமை பயிற்சி

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் யூனிசெஃப் நிறுவனம் இணைந்து (13,14/05/24 தேதிகளில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு நாட்களாக ) குழந்தைகள் பற்றிய செய்தி சேகரிப்பில், செய்தி வெளியிடுவதில் உள்ள சாதக பாதகம் மற்றும் குழந்தைகளுக்கான சமூக உரிமை என்பன பற்றியும்,அதற்காக களத்தில் பணியாற்றி வரும் முன்களப்பணியாளர்களாக உள்ள அனைத்து மாவட்ட பத்திரிகை செய்தியாளர்களை அழைத்து இரண்டு நாள்களாக பயிற்சியை அளித்தார்கள், பயிற்சியாளராக விடுதலை நாளிதழ் சார்பாக மதுரை மாவட்டத்திலிருந்து ஆர்.இராதா, மற்றும் இரா.சுரேசு கலந்து கொண்டனர்.

யூனிசெப் ஆலோசகர் முரளிகிருஷ்ணா, அவர்கள், இரண்டு நாள்களும் சிறப்பான கருத்துக்களை வழங்கியும், பல்வேறுபட்ட தளங்களில் பணியாற்றி வரும் செயல்பாட்டாளர்கள் பலரும் பல்வேறு கோணங்களில் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் ,என்ன மாதிரியான முன்னெடுப்பு செய்ய வேண்டுமென முக்கியமான கருத்துக்களையும் வழங்கினார்.இறுதியாக அனைவருக்கும் அண்ணா பல்கலை கழக ஊடக அறிவியல் துறை தலைவர் அருள்செல்வன் சான்றிதழ் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *