பெண்கள் குறித்து ஆபாசப் பேச்சு! எச்.ராஜாவின் மேல் முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

viduthalai
1 Min Read

புதுடில்லி, மே15- தமிழ்நாடு பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்தும், பெரியார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசக் கருத்துகளை பதிவிட்டதாக கூறி மேனாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல்நிலைய காவல்துறையினர் எச்.ராஜா மீது பெண்களுக்கு எதி ராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக் கில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்ட நீதிமன் றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன் றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், வழக்கை விரைந்து விசா ரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தர விட்டது.
மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளு படி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எச்.ராஜா மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (14.5.2024) விசாரணைக்கு வந்தபோது எச்.ராஜா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பெண் களை அவமதிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் எச்.ராஜா கருத்து தெரிவிக்க வில்லை என வாதிட்டார்.

இந்நிலையில், எச்.ராஜா தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவரது மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *