கழக வீராங்கனை சரோஜா அம்மையார் மறைவு கழகத்தின் சார்பில் இரங்கல்

1 Min Read

இரங்கல் அறிக்கை

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும், விக்கிர வாண்டியில் தந்தை பெரியார் சிலை அமை வதற்கு முழுக் காரண மாகப் பணிபுரிந்தவருமான விக்கிரவாண்டி – மறைந்த பெரியார் பெருந் தொண்டர், நல்லாசிரியர் 

த. தண்டபாணியின் இணையர் த. சரோஜா அம்மையார் வயது 89, (ஆசிரியர் – ஓய்வு) இன்று (20.11.2023)  காலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 

குடும்பமே கழகக் கொள்கையை வாழ்வியலாகக் கொண்டது. அம்மையாரின் இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல; கழகத்துக்கே  ஏற்பட்ட இழப்பாகும்.

சில மாதங்களுக்கு முன்பு திண்டிவனம் கழகத் தோழர்களுடன் அம்மையார் இல்லத்திற்குச் சென்று அவரின் உடல் நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடித் திரும்பினோம்.

அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை
20.11.2023

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *