ஒன்பது மாநிலங்களில் 99 தொகுதிகளில் நேற்று 63% வாக்குப்பதிவு

viduthalai
4 Min Read

புதுடில்லி, மே 14- நான்காம் கட் டமாக 96 மக்களவைத் தொகு திகளுக்கு நேற்று (13.5.2024) தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவா கின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்வு கள் அரங்கேறின. 2 இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேற்குவங்கத் தின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸார், பாஜ கவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

நாடு முழுவதும் 7 கட்டங் களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. 4ஆம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று (13.5.2024) வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதன்படி ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்ட மாக தேர்தல் நடைபெற்றது. அதோடு அந்த மாநிலத்தின் 175 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத் தில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்த முள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

தெலங்கானாவில் 17, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங் கத்தில் 8, காஷ்மீரில் ஒரு மக் களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

ஆந்திராவில் வன்முறை

ஆந்திராவில் நேற்று (13.5.2024) காலையில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது. ஆனால் பிற்பகலில் பல்வேறு இடங்களில் வன் முறைகள் அரங்கேறின.
பல்நாடு மாவட்டம், கம்பம்பாடு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தெலுங்கு தேசம் – ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கோடாரி, கத்தி, கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் ஒரு பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பீலேரில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் 3 பேரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அன்னமைய்யா மாவட்டம், பாபக்ககாரி பல்லி யில் தெலுங்கு தேசம் முகவ ரான சுபாஷ் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காய மடைந்த அவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். கடப்பா மாவட்டத்தில் சின்ன குலபாலேரு வாக்குச் சாவடி யில் தெலுங்கு தேசம் முகவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சிறீகாகுளம் மாவட்டம் கோகர்லபல்லியில் ஏற்பட்ட மோதலில் தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இதே போன்று திருப்பதியை அடுத் துள்ள சந்திரகிரி தொகுதியில் தெலுங்குதேசம், ஜெகன் கட்சியினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கு காவல்துறையினர் விரைந்து சென்று இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்ததோடு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட னர்.

பல்நாடு மாவட்டம் நரச ராவ் பேட்டை நகராட்சி பள்ளி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சதல வாடா அர்விந்த்தின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் கலவரக் காரர்களை கலைத்தனர்.

மேற்குவங்கத்தின் பர்த மான்- துர்காபூர் மக்களவைத் தொகுதியில் பல்வேறு பகுதி களில் பாஜக தொண்டர்கள், திரிணமூல் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட் டன. பாஜக வேட்பாளர் திலீப் கோஷ் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாது காவலர்கள் காயமடைந்தனர். வாகனமும் கடுமையாக சேத மடைந்தது.

பீகாரில் முங்கர் பகுதி வாக்குச் சாவடியில் தேர்தல் அலுவலர் ஓம்கார் குமார் சவுத் ரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பீகாரில் வன்முறை

பீகாரின் முங்கர் பகுதிக்கு உட்பட்ட 145, 146 வாக்குச் சாவடிகளை குறிவைத்து சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத் தினர். பாதுகாப்புப் படை வீரர்கள் தடியடி நடத்தி அவர் களை விரட்டியடித்தனர். இதில் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் 8 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.5.2024) தேர்தல் நடைபெற்றது. அந்த மாநில முதலமைச்சர் மோகன் யாதவ், உஜ்ஜைனியில் வாக்களித்தார். தேசிய மாநாடு கட்சித் தலை வர் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஓமர் அப்துல்லா ஆகி யோர் ஆகியோர் சிறீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

ஒட்டுமொத்தமாக 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.01 சதவீத வாக்குகள் பதிவா கின. மேற்குவங்கத்தில் அதிக பட்சமாக 76.02 சதவீத வாக்கு கள் பதிவாகின. குறைந்தபட்ச மாக ஜம்மு – காஷ்மீரில் 36.88 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திர சட்டப்பேரவை தேர்த லில் மாலை 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலத்தின் மக்களவை தேர்தலில் 71 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகின.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *