முக்கிய தீர்ப்பு: சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது

viduthalai
2 Min Read

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை, மே 14- சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2014ஆம் ஆண்டு இவர், 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண் டுள்ளார். பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கி உள்ளார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற் றோர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சென்னை திரும்பிய அந்த சிறுமி காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இதன்பின்பு, பெற்றோருடன் அந்த சிறுமி அனுப்பி வைக்கப் பட்டார். சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ நீதிமன்றம், கடந்த 2018ஆம் ஆண்டு சதீஷ்கு மாருக்கு 10 ஆண்டு சிறைத் தண் டனை விதித்தது. இந்த தண்ட னையை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சதீஷ்குமார் தரப் பில் ஆஜரான வழக்குரைஞர், ‘மனு தார ரும், சிறுமியும் காதலித்து வந்துள்ள னர். சிறுமியின் விருப்பத் தின் பேரில் தான் மனுதாரர் சிறுமியுடன் உறவு வைத்துள்ளார். எனவே, மனுதார ருக்கு விதிக்கப் பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என வாதா டினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். அவர் விருப்பத்தின் பேரில்தான் மனுதாரர் உறவு கொண்டதாக கூறு வதை ஏற்க முடியாது. தற் போது அந்த சிறுமிக்கு வேறொரு வருடன் திருமணம் நடந்துள்ளது. மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடு பட்டுள்ளார்.

மனுதாரருக்கு 25 வயது ஆகிறது. சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறியாமல் இருக்க முடி யாது. எனவே, மனுதாரரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது’ என தீர்ப்பு கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *