எதிர்காலத்தில் தேர்தல் நடக்க வேண்டுமா, அப்படி என்றால் பிஜேபி தோற்க வேண்டும்!

1 Min Read

காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரிக்கை

புதுடில்லி,மே 14- பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் நேற்று (13.5.2024) நடைபெற்ற இந்தியா கூட்டணி பிரச்சாரக் கூட்டத் தில் கார்கே பேசியதாவது:
பா.ஜ.க. கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுத்தவர்களுக்கு, வியாபாரம், தொழிலை வழங் கியதன் மூலம்அவர்களை மேலும் பணக்காரர்களாக்கி யுள்ளார் பிரதமர் மோடி.

நாட்டில் ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் அச்சுறுத்தல் வந்துவிட்டது. பிரதமர் மோடி 3-ஆவது முறையாக பதவியேற்றால் எதிர்காலத்தில் தேர்தல் என்ற ஒன்றே இருக்காது. தேர்தலை ஒழித்து விடுவார்கள்.
ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனை கைதுசெய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அதேபோல் தொழிலதிபர்கள் அதானியையும், அம்பானி யையும் ஏன் கைது செய்யவில்லை? இந்தியா கூட்டணிகட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜக அரசு கைது செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் விடுவிக்கப்படுவர்.
-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *