தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்: திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

Viduthalai
3 Min Read

அரசியல்

திருச்சி, செப். 8 – திருச்சி பெரியார் மாளிகையில் 7.9.2023. மாலை ஆறு மணிக்கு  தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் தலைமையேற்றார்.

திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ராஜ்,  மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ்,  மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ்,  மாநகரத் தலைவர் சா.துரைசாமி ஆகியோர் முன்னிலை யேற்றார்கள். கூட்டத்தில் முதலாவதாக மேனாள் மகளிரணி மண்டல செயலாளர் சோ.கிரேசி மறைவிற்கு அனைவரும் இரண்டு நிமிடம் இரங்கல் தெரிவித்தனர்.

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை மிகச் சிறப்பாக தாரைப் தப்பட்டை முழங்க மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது இனிப்பு வழங்குவது என வும், தோழர்கள் இல்லங்களில் முதலில் கொடியேற்றி குடும்பத்தோடு கொண்டா டுவது கிராமங்கள் நகரங்கள் தோறும் கழக கொடியினை ஏற்றுவது, செடி நடுவது இனிப்புகள் வழங்குவது எனவும், 17.9.2023. பெரியார் பிறந்த நாளன்று மத்திய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலையில் சரியாக 9:30 மணிக்கு மாலை அணிவித்து விட்டு சிலையில் இருந்து ஊர் வலமாக ஊர்திகளில் மாநகரத்தில் தோழர்களுடன் தாரை தப்பட்டை சத்தம் முழங்க ஊர்வலமாக சென்று கொடிகள் ஏற்றுவது எனவும், பிறகு ஊர்வலமாக சென்று திருவரங்கம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க திருவரம்பூர் ஒன்றிய தோழர்கள் மாநகரத் தோழர்கள் சோமர சம்பேட்டை தோழர்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட தலைவர் தலைமையில் ஊர்வல மாக சென்று மாலை அணிவித்து விட்டு திருவரங்கத்தில் 30-க்கும் மேற்பட்ட கொடிகளை ஏற்றுவது எனவும், திராவிடர் கழகமாம் தாய்க் கழகத்தின் சார்பாக அக்டோபர் 6ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர் களுக்கு பாராட்டு விழாவில் அனைத்து திருச்சி மாவட்ட கழகத் தோழர்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்று சிறப்பிப் பது எனவும், தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதினை பெற்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களை திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது எனவும், தகைசால் தமிழர் விருதினை வழங்கி சிறப்பித்த முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர் களை வாழ்த் தியும் நன்றியையும் தெரி வித்துக் கொள்கி றது எனவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் பெரியார் 1000 போட்டி தேர்வுகளை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார்,  மாவட்ட தலைவர். ஞா.ஆரோக் கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், மாநகர தலைவர் சா துரைசாமி, மாவட்ட இளைஞரணி செய லாளர் சு. மகாமணி, தில்லை நகர் பகுதி தலைவர் ராமதாஸ்,   தில்லை நகர் பகுதி செயலாளர் பா. சுல்தான் பாஷா, பாலக் கரை பகுதி செயலாளர்.முபாரக் அலி, திருவரங்கப் பகுதி தலைவர் சா.கண்ணன், திருவரங்கப் பகுதி செயலாளர் இரா. முருகன், மாவட்ட மாணவர் கழக தலை வர் அறிவுச்சுடர், தில்லை நகர் பகுதி துணைச் செயலாளர் பிரவீன் குமார், மாவட்ட மாணவர் கழக துணைச் செய லாளர் கருப்பு கோகுல்ராஜ், தி.தொ.க. தலைவர் பெல் அசோக்குமார், மகளிரணி பா. இசபெல்லா,  காட்டூர் பகுதி செய லாளர் ம. சங்கிலி முத்து, வண்ணை நகர் பகுதி தலை வர் ஆ.ஜெயராஜ், திருவெறும்பூர் சு.இளங் கோவன், பெரியார் மாளிகை ச. திருநாவுக் கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *