திருவாரூர், செப். 8– திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட் டம் 3.9.2023அன்று மாலை 5.00 மணிக்கு மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை யிலும் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருட்டினமூர்த்தி மற் றும் மாவட்ட விவசாய அணி தலைவர் பி.ரத்தினசாமி முன்னி லையிலும் நடைபெற்றது.
மாவட்ட கழக துணை செய லாளர் கோ.ராமலிங்கம் அனை வரையும் வரவேற்று பேசினார்.
கொரடாச்சேரி ஒன்றியம் தலைவர் சி.ஏகாம்பரம், செயலா ளர் மு.சரவணன், திருவாரூர் ஒன்றியம் தலைவர் கா.கவுதமன், துணை தலைவர் இரா.ராஜேந் திரன், திருவாரூர் நகர தலைவர் கா.சிவராமன் திருவாரூர் நகர செயலாளர் ப.ஆறுமுகம், நன் னிலம் ஒன்றியம் தலைவர் இரா. தன்ராஜ், நன்னிலம் ஒன்றியம் செயலாளர் சு.ஆறுமுகம், நன்னி லம் நகர கழக தலைவர் தன்.சஞ்சீவி, நன்னிலம் ப.க தலைவர் சா. கரிகாலன், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் செயலாளர் இரா.அறிவழகன், மாவட்ட இளைஞ ரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத், திருவாரூர் மாவட் டம் இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றி னார்கள்.
தலைமைக் கழக அமைப்பா ளர் சு.கிருட்டினமூர்த்தி கூட்ட நோக்கம் செயற்பாடு பற்றி விரி வாக விளக்கி பேசினார் மாவட்ட கழக செயலாளர் வீர.கோவிந்த ராசு கூட்ட தீர்மானங்களை வாசிக்க அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்டது. மாவட்ட கழக தலை வர் வீ.மோகன் தீர்மானங்களை விளக்கி கழகத்தின் தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார். இறுதியில் நகர செயலாளர் ப. ஆறுமுகம் நன்றி உரையாற்றி னார்.கும்பகோணம் மாநக ராட்சி கழக தலைவர் கு.கவுதமன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது.
தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியில் திரா விடர்களின் தேசிய திருவிழா வாக கொண்டாடும் வகையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்டம் முழுவதும் கழக அமைப்பு உள்ள ஊர்களில் தவறாமல் கழக கொடி ஏற்றுவது மாணவர் களுக்கு எழுது பொருள்கள் நோட்டு, புத்தகங்கள் வழங்கி கழக தோழர்கள் இல்லங்களில் கழக கொடி ஏற்றுவது எனவும்,
தமிழ்நாடு அரசு 2023 ஆண் டுக்கான “தகைசால் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களையும் விருது வழங்கிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்களுக்கு நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள் கிறது எனவும்,
வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தஞ்சையில் நடை பெறும் முத்தமிழ் அறிஞர் கலை ஞர் நூற்றாண்டு விழா தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது அதற்கு சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர் களை அழைத்து நடத்த இருக் கின்ற மாநாட்டில் மாவட்டத் தின் சார்பில் அனைத்து தோழர் களும் குடும்பம் குடும்பமாக சென்று சிறப்பிக்க வேண்டும் என்றும்,
வரும் 22.9.2023 அன்று தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூட்டம் திருவாரூரில் நடத்துவது என வும், பெரியார் 1000 வினா விடை போட்டி திருவாரூர் மாவட்டம் அனைத்து பள்ளிகளிலும் சிறப் பாக நடத்துவது எனவும், தமிழ் நாட்டு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் போதைப் பொருள் களுக்கு அடிமை ஆவதை தடுக்க பள்ளி தோறும் அறிவியல் நிகழ்ச்சி நடத்த தமிழ்நாடு அரசினை இக் கூட்டம் கேட்டு கொள்கிறது எனவும், மூட நம் பிக்கை தடை சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசை கேட்டு கொண்டும், அய்யாவின் பிறந்த நாளில் அனைத்து ஒன்றி யத்திலும் கொடி ஏற்ற கீழ்க் கண்ட மாவட்ட பொறுப்பாளர் கள் சென்று ஒன்றிய தலைவர்கள் வழிகாட்டுதல்படி சிறப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக் கப்பட்டது.
பொறுப்பாளர்கள்
குடவாசல்: கோ.செந்தமிழ்ச் செல்வி, இரா.சிவக்குமார்.
நன்னிலம் ஒன்றியம் : வீர.கோவிந்தராசு.
திருவாரூர் ஒன்றியம் கி.அருண்காந்தி.
திருவாரூர் நகரம்: வீ.மோகன், கா.சிவ ராமன்
திருத்துறைப்பூண்டி: சு.கிருட்டினமூர்த்தி.
கொரடாச்சேரி ஒன்றியம் க. வீரையன்