போபால், மே. 12 மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த குடும்பத்தினர் 12 பேர் சியோபூரில் உள்ள மலைக்கோவிலான துர்க்கையம்மன் கோவிலுக்கு காரில் சென்று திரும்பியபோது. மலை அடிவாரத்தை நோக்கி அவர்களுடைய கார் வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை கார் இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது அதிவேகத்தில் சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. இந்தவிபத்தில் 3 பேர் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைத்த 9பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இதுதான் கடவுள் சக்தியா? கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் பலி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:india
Leave a Comment
Popular Posts
10% Discount on all books