மைசூரு, மே 12 கர்நாடகாவில் சாம் ராஜ்நகர் தொகுதி மக்களவை உறுப்பினர் பா.ஜனதாவை சேர்ந்த சீனிவாச பிரசாத் கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந் தார். அவர் மைசூரு மண்டலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மைசூ ருவில் நேற்று நடைபெற்றது.இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள முதலமைச்சர் சித்தராமையா, மேனாள் முதல்-அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
இதில் எடியூரப்பா பேசும்போது, ‘முதலமைச்சர் சித்தராமையாவை ‘ஜனபிரிய’ (மக்கள் நேசிக்கும்) முதலமைச்சர் என்று கூறி அவரை புகழ்ந்து பேசினார்.
அவர்கள் அரசியல், கொள்கைகள் ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருந் தாலும், தனிப்பட்ட முறையில் நண்பர் களாக உள்ளனர். எடியூரப்பாவின் பேச்சு அங்கு கூடியிருந்த சித்த ராமையா வின் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியது.
கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை பாராட்டுகிறார் பிஜேபி மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா
Leave a comment