கருநாடகாவில் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்மீது அவதூறு பரப்பிய பிஜேபி பிரமுகர் கைது

Viduthalai
1 Min Read

பெங்களூரு, மே 12 கருநா டகத்தில் உள்ள ஹாசன் நாடாளுமன்ற தொகுதி உறுப் பினராக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை எச்.டி.ரேவண்ணா. இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிப்புரா சட்ட மன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளி யாகி கருநாடகத்தில் பர பரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சிறப்பு புலனாய்வுகுழு (எஸ்.அய்.டி.) காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த விவகாரம் வெளிவரும் முன்பாகவே பிரஜ்வல் ரேவண்ணா தனது மக்கள் பிர திநிதிக்கான ‘டிப்ளோமேடிக்’ கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்’ தாக்கீது பிறப் பிக்கப்பட்டுள்ளது. அவரை பன்னாட்டு அளவில் ‘இன்டர் போல்’ (Interpol) காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.
இதனிடையே, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேவராஜ் கவுடாவை காவல் துறையினர் கைது செய்துள் ளனர். பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா சென்ற தேவராஜ் கவுடாவை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சொத்து ஒன்றை விற்க உதவி செய்வதாக கூறி தனக்கு பாலியல் தொல்லை கொடுத் தாக 36-வயது பெண் அளித்த புகாரில் தேவராஜ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு கரு நாடக சட்டமன்ற தேர்தலில் பிரஜ்வலின் தந்தை ரேவண் ணாவை எதிர்த்து தேவராஜ் கவுடா பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை கசிய விட்ட தாக தேவராஜ் கவுடா மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *