கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு

Viduthalai
2 Min Read

சென்னை, மே 12- பல்வேறு வசதிகளுடன் கிண்டி சிறு வர் பூங்கா புதுப்பொலிவு பெற உள் ளது. விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையின் பிரதானப் பகுதியான கிண்டியில், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் மான்கள், குரங்குகள், பறவைகள் என ஏராளமான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்கா வுக்கு விடுமுறை நாட்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் குழந்தைகளுடன் வந்து செல்வார்கள்.

ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் முதல் 9 லட்சம் பார்வையா ளர்கள் வந்து செல்லும் பூங்காவாக இது இருந்து வருகிறது. இந்த நிலையில் ரூ.20 கோடி செலவில் இந்த பூங்காவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி முதல் மூடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட் டன. வன உயிரினங்களின் அமைவிடங்கள், இயற்கையாக காடுகளில் உள்ளது போன்ற அமைப்புடன் ஏற்கெனவே இருந்தவைகள் அனைத்தையும் மாற்றி சீரமைக்கப்பட்டுள் ளன. இதுதவிர, சிறுவர்களுக்கான நூலகம், விழா அரங்கம், பார்வையாளர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பறவைகள், விலங்குகளின் சிறப்பம்சங்கள், அதன் வாழ் வியல் முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘கியூஆர் கோடு’ அமைக்கப்பட்டிருக்கிறது.புதிய உள்கட்ட மைப்பு வசதிகள், உணவகம், வாகன நிறுத்தும் இடம், விளையாட்டு உபகரணங்கள் என சிறுவர் பூங்கா உலகத் தரத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. குறிப்பாக ‘செல்ஃபி பாயிண்ட்’ என்று சொல்லப்படும் “அய் லவ் கிண்டி சிறுவர் பூங்கா” என்ற இடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மூடப்பட்டபோது, ஆறு மாதத்தில் இதற்கான பணி கள் நிறைவு பெற்று மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது. ஆனால் ஆறு மாதத்தை கடந்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இடையில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்த தால், பூங்கா திறப்பு தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது.

முழு வீச்சில் பணிகள்
வழக்கமாக கோடை விடுமுறை நாட்களில் வெளியில் சென்று சுற்றிப்பார்க்க விரும்பும் சென்னைவாசிகளின் பிர தான தேர்வாக கிண்டி தேசிய பூங்கா இருக்கிறது. அந்த வகையில் கோடை விடுமுறை முடிவதற்குள் பூங்காவை விரைவில் திறப்பதற்கு அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு திறந்து வைக்கப்படும் பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, முதலமைச்சரோ, அமைச்சரோ திறந்து வைக்க முடியாது. மாறாக வனத்துறை சார்ந்த உயர் அதிகாரியோ அல்லது தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரி களோ திறந்து வைக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *