இந்தியாவின் பொருளாதார நிலை ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்

1 Min Read

புதுடில்லி, மே 12 இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
26.4.2024ஆம் தேதி முடிவில் நாட்டின் அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.412 பில்லியன் டாலர் குறைந்து 637.922 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

தங்கம் கையிருப்பில் சரிவு.. ஆர்பிஅய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அந்நிய செலாவணியின் மொத்த கையிருப்பு 2.28 பில்லியன் டாலர் குறைந்து 640.33 பில்லியன் டாலர்களாக இருந்தது என அறிவித்தது. இதற்கு முன்னதாக, ஏப்ரல் 5 ஆம் தேதி உடன் முடிந்த வாரத்தில் அந்நிய செலாவணி சாதனை அளவாக 648.562 பில்லியன் டாலர் அளவீட்டுக்கு உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2021 இல் எட்டப்பட்ட 642.453 பில்லியன் டாலர் என்ற முந்தைய சாதனை அளவீடு மார்ச் மாதத்தில் தகர்க்கப்பட்டு, ஏப்ரல் 5ஆம் தேதி புதிய உச்சம் எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் வெளிநாட்டு நாணய சொத்துகள் (திஷீக்ஷீமீவீரீஸீ சிuக்ஷீக்ஷீமீஸீநீஹ் கிssமீts) முக்கிய பகுதியாக விளங்குகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி முடிந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய சொத்துகள் அளவு 1.159 பில்லியன் டாலர் குறைந்து 559.701 பில்லியன் டாலர்களாக உள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் என்பது டாலரில் மதிப்பிடப்படுகிறது. ஆனால் இதில் டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற நாணயங்களின் மதிப்பு உள்ளது. மேலும் வெளி நாட்டுக் கையிருப்பின் மொத்த ஏற்றம் அல்லது இறக்கம் வெளிநாட்டு நாணய சொத்துகளில் கணக் கிடப்படும்.
வெளிநாட்டு செலாவணி கையிருப்பில் அடுத்த முக்கிய பங்கீடு தங்கம் கையிருப்பு, ஏப்ரல் 26 ஆம் தேதி முடிந்த வாரத்தில் 1.275 பில்லியன் டாலர் குறைந்து 55.533 பில்லியன் டாலர்களாக உள்ளது. தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *