வருந்துகிறோம் கல்லக்குறிச்சி இரா.நல்லமுத்து மறைந்தாரே!!!

1 Min Read

கல்லக்குறிச்சி, மே 11- கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பகுத்தறிவாளருமா கிய பெரியார் பெருந் தொண்டர் இரா.நல்ல முத்து (வயது 90) 9.5.2024 அன்று காலை 10 மணிய ளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இந்தியன் வங்கியில் நீண்ட காலம் நகை மதிப் பீட்டாளராக இருந்து தந்தை பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கைகளை தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும், பரப்பியவர். தன் குடும்ப உறுப்பினர்களையும் கழக கொள்கை குடும்ப மாக வைத்திருந்தவர். கழக மாநாடுகள், கண் டன ஆர்ப்பாட்டங்கள் போன்றவைகளில் தவறா மல் கலந்து கொள்பவர். ‘விடுதலை’ இதழின் தொடர்ச்சியான வாச கர். மாநாடுகளுக்கு நன் கொடைகளையும் வழங்கி கலந்து கொள்பவர்.
அவரின் இறுதி நிகழ் வில் மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ் கர், தலைமையில் மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்ப ராயன், மாவட்ட கழக துணைத்தலைவர் குழ. செல்வராசு, மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.முத்து வேல், நகர தலைவர் இரா.முத்துசாமி; செயலாளர் நா.பெரியார் உள்பட பலர் கலந்துக் கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *