கடவுளைக் காப்பாற்றும் யுக்தி!

1 Min Read

ஒரு கோடி கோவிந்தா நாமம் எழுதி வந்தால், 

வி.அய்.பி. தரிசனமாம்.

– திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு அறிவிப்பு.

கடவுள்மீதான பக்தியை பரப்ப இப்படி ஒரு மலிவான யுக்தியா?

கடவுளை காப்பாற்ற மனிதர்கள் முயற்சியா?

இல்லாத ஒன்றைக் காப்பாற்ற எவ்வளவு முயற்சி களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா?

இதுதான் மதச்சார்பின்மையோ!

ஜி-20 மாநாட்டின் முகப்பில் நடராஜர் சிலையா? பன்மதங்கள் உள்ள நாட்டில், மத நம்பிக்கையற்றவர் களும் வாழும் பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு விரோதமாகக் குறிப்பிட்ட இந்து மத கடவுளை ஒரு பன்னாட்டு மாநாட்டு முகப்பில் வைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கொச்சைப்படுத்துவது ஆகாதா?

பா.ஜ.க. என்றால் பார்ப்பனியம், மதவாதம் என்பது பச்சையாக வெளிப்பட்டு விட்டதே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *