“மனித வர்க்கத்தாருள், ஆண், பெண் ஆகிய – இரண்டே ஜாதி கள் ஏற்பட்டிருக்க, நீங்களே நான்கு வகையைப் பிரித்துக் கொண்டு அவ்வகைகளுள்ளும் வேதியர்களாகிய நீங்களே சிறந்த வர்களென்றும், உங்களாலேயே உலகத்தில் எல்லாக் காரியங்களும் நடைபெறுகின்றன என்றும் எண்ணிக் களிக்கின்றீர்; அவ்வாறு உங்களாலேயே உலகில் எல்லாம் நடைபெறக் கூடியனவாயிருக்குமானால், நீங்களில்லாத அநேக தேசங்கள் இருக்கின்றனவே; அவை எல்லாம் நீங்களிருக்கும் தேசத்தைக்காட்டினும் மிகச் செழிப்படைந்திருக்கின்றனவே? நீங்களில்லாததால் அவை பாழடைந் தல்லவோ இருக்க வேண்டும்; அங்ஙனம் பாழடையாமல் செழிப்புற்று இருப்பதற்கு காரணம் யாது? இதனாலேயே நீங்கள் கொண்டிருக்கும் கொள்கை பேதைமை என்பது விளங்கவில்லையா?.”
– “கபிலரகவல் மூலமும் உரையும்” நூல்
‘பிராமணர்கள்’ இல்லாத தேசங்கள் செழிப்படைய காரணமென்ன? 15ஆம் நூற்றாண்டு புலவரின் கேள்வி!
Leave a Comment