விளையாட்டிலும் மதமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்குக் காவி வண்ண ஜெர்சி கண்டனங்கள் வெடிக்கின்றன!

2 Min Read

புதுடில்லி, மே 10 கிரிக்கெட்டிலும் மதமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களுக்குக் காவி வண்ண ஜெர்சியா என்று நாடெங்கிலும் கண்டனங்கள் வெடிக்கின்றன!
இதுவரை நடைபெற்றுள்ள மூன்று கட்ட தேர்தலில் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவான சூழல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், பிரதமர் மோடி தனது வெறுப் புப் பேச்சை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். வெறுப்புப் பேச்சு தொடர்பாக மோடி உள்ளிட்ட பாஜக வினர் மீது புகார் அளித்தாலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் மே 7 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை வைத்தும் மோடி மதரீதியாக வெறுப்புப் பேச்சை கக்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது:
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப் படையில் முடிவு செய்வார்கள். விளையாட்டிலும் சிறு பான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே அவர் களின் நோக்கம்” என பேசினார். பிரதமர் மோடியின் இந்த வெறுப்புப் பேச்சிற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் உள்பட நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வரும் நிலையில், அரசியல் பின்புலம் இல்லாத கிரிக்கெட் ரசிகர்களும் மோடிக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

காவி ஜெர்சியால் பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு
9 ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெ ரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. இந்தத் தொடர் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கும் நிலையில், தொடரில் பங் கேற்கும் 15 நாடுகளும் அணி வீரர்கள் விவரம் மற்றும் ஜெர்சியை (வீரர்களின் உடை) வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தனது உலகக் கோப் பைக்கான ஜெர்சியை 4 நாள்களுக்கு முன் வெளியிட் டது. ஜெர்சியை ஹெலிகாப்டர் சிறப்பு ஏற்பாடு மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஅய்) அறிமுகப் படுத்தினாலும், இன்றுவரை ரசிகர்கள் ஜெர்சிக்கு கண்டன கருத்து மூலம் பாஜகவை பந்தாடி வருகின்றனர்.

காரணம் இந்திய அணியில் ஜெர்சியில் இதுவரை இல்லாத வகையில் 50% அளவில் “காவி வண்ணம்” அச்சிடப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் மூலம் பிரதமர் மோடி உள் ளிட்ட பாஜகவினரை வறுத்தெ டுத்து வருகின்றனர்.
“மோடி உத்தரவிட பிசிசிஅய் செயலாளரான அமித் ஷா மகன் ஜெய்ஷா கிரிக்கெட்டிற்குள் காவியைக் கொண்டு வருகிறார். இதை ஏற்க மாட்டோம்” என ரசிகர்கள் டிரெண்டிங் ஆகும் அளவிற்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *