குடியரசு தலைவர் அளிக்கும் ஜி 20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு அழைப்பு இல்லையாம் : ராகுல் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசியல்

புதுடில்லி, செப்.9 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (9.9.2023) மாலை விருந்து அளிக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியஅமைச்சர்கள், மேனாள் பிரதமர்கள், அனைத்து முதலமைச் சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. ஆனால், காங்கிரஸ் தலைவரும், மாநிலங்க ளவை எதிர்க்கட்சி தலைவ ருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப் பினும், பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது அப்போது, ராகுல்காந்தி கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவரை அழைக்கக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்து விட்டனர். அது சில உண்மைகளை உணர்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் 60 சதவீத மக்களின் தலைவரை அவர்கள் மதிக்கவில்லை. இது, மக்கள் சிந்திக்க வேண்டிய விடயம். இதற்கு பின்னால் எந்த மாதிரியான சிந்தனை இருக்கிறது என் பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்கார் முதலமைச்சர்

காங்கிரஸ் மூத்த தலை வரும், சத்தீஷ்கார் மாநில முதலமைச்சர்யுமான பூபேஷ் பாகல் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது கெட்ட வாய்ப்பானது மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில், எதிர்க் கட்சி முக்கிய பங்கு வகிக் கிறது. அத்தகைய நிலையில், எதிர்க்கட்சி தலைவரை அழைக்காதது, ஜனநாயகத் தின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார்.

மன்மோகன்சிங் பங்கேற்வில்லை

இதற்கிடையே, மேனாள் பிரதமர்கள் தேவே கவுடா, மன்மோகன்சிங் ஆகியோர் உடல்நிலையை காரணம் காட்டி, விருந்தில் பங்கேற்க இயலாது என்று ஒன் றியஅரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேற்கு வங்க  மாநில முதலமைச்சர் மம்தா  இமாசலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுக்கு ஆகியோர் தங்களது வருகையை உறுதி செய்துள் ளனர். பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், டில்லி முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பக வந்த் மான் ஆகியோர் பங் கேற்பார்கள் என்று தெரி கிறது. கருநாடகா, சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநி லங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *