உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘நான் முதல்வன்’ திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மே 13 வரை நடைபெறும்

viduthalai
1 Min Read

சென்னை, மே 9-‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழி காட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி, 8.5.2024 முதல் 13ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங் களிலும் நடைபெறு கிறது.
இதுகுறித்து தமிழ் நாடு அரசு 7.5.2024 அன்று வெளியிட்ட செய் திக் குறிப்பு வருமாறு:

12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட் டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சியை கடந்த 2022 ஜூன் 25ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த 2022-2023 கல் வியாண்டில் அரசுப் பள் ளியில் பயின்று 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களில் உயர்கல்விக்கு வழிகாட்டு தல் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், சட்டம், பாலிடெக் னிக் மற்றும் இதர உயர் கல்வி படிப்புகளில் சேர்ந் துள்ளது குறிப்பிடத் தக்கது.
இதன் தொடர்ச்சி யாக, கடந்த பிப். 29ஆம் தேதி கோயம்புத்தூரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘கல்லூரிக் கனவு 2024’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, மாவட்ட வாரியாக ‘நான் முதல மைச்சன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

அதன்படி, மே 8ஆம் தேதி (நேற்று) சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம் மாவட்டங்களில் நடை பெற்றது.
தொடர்ந்து, மே 9ஆம் தேதி (இன்று) திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடு துறை, திண்டுக்கல், தரும புரி மாவட்டங்களிலும், மே 10ஆம் தேதி செங்கல் பட்டு, திருப்பூர், அரிய லூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ண கிரியிலும், 11ஆம் தேதி காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விரு துநகர், தூத்துக்குடி, திருப்பத்தூரிலும், மே 13ஆம் தேதி ராணிப் பேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவா ரூர், புதுக்கோட்டை, கள் ளக்குறிச்சி, சிவகங்கை, ராம நாதபுரம், திருவண்ணா மலை, வேலூர் மாவட்டங்க ளிலும் நடைபெறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *