திராவிடத்தின் எழுச்சி!! மோடியின் வீழ்ச்சி!

Viduthalai
2 Min Read

மோடியின் தேர்தல் தோல்வி பி.ஜே.பி.,
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் கொள்கைகளுக்கு, சித்தாந்தங்களுக்கு, தத்துவங்களுக்கு தோல்வி என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
வடபுலங்களில் பிஜேபியின் பரப்புரைகள், தேர்தல் வாக்குறுதிகள், அரசின் செயல்பாடு இன்மை, இன்றைக்கும் கேள்விக்கு உட்படுவதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன.
அவர்கள் எதிர்பார்க்கும் குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில், 2019 தேர்தலில் பெற்ற வெற்றியைவிட 10 இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைவாகவே வெற்றி பெறுவார்கள் என அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

ஆளும் பிஜேபிக்கு பல அறிக்கைகள் அதிகாரி களால் தரப்பட்டிருப்பதும் அவர்களது பரப் புரைகளில் தெளிவாக தெரிகிறது.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக் கையை கண்டு குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்கள் கொதித்துப் போயிருப்பது அவர்களது அறிக்கைகளிலேயே தெளிவாக தெரிகிறது.
வலதுசாரிகள் இந்த காங்கிரசை தற்பொழுது “திராவிட காங்கிரஸ்” என அலறுகிறார்கள்.
தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக்கு எதிர் கருத்து வைக்காமல் காட்டுக் கத்தலாக கத்துகிறார்கள்.
மோடி, அமித்ஷா முகங்களில் பயம் தெளிவாக தெரிகிறது. அவர்களது பரப்புரைகளில் “வெறுப்பு அரசியல்” முன் வைக்கப்படுகிறது.

எல்லோருக்கும் பிரதமராக இருக்கிற மோடியே மதவாதத்தை முன்னிறுத்தி பேசுகிறார்.
சித்பவன் பார்ப்பனர்கள், கொலை பாதகம் செய்யவும் துணிந்து விட்டார்கள். தானம், பேதம், தண்டம், போன்ற சூட்சும வித்தைகளை முன் எடுக் கிறார்கள். தேர்தலுக்கு முன்னேரே வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது, எதிர்க்கட்சியினரை துன்புறுத்துவதும், பயப்படுத்துவதும், மிரட்டுவதும் இந்தியா முழுவதும் தொடர் நிகழ்வாகிறது. தொடர்ந்து முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக, புலனத்தில் தினமும் செய்திகள் வெளியிடுவதும், அதை நமது “சூத்திர சங்கிகள்” பரப்புவதும் நாள்தோறும் நடைபெறுகிறது. நமது திராவிடர் கழகத்தின் பரப்புரைகள், புலனம் மூலமான கருத்து பரப்புதல்கள் மூலம் அவைகளை முறியடிப்பது நாள்தோறும் தொடர்கின்றது.

ஜனநாயகம் என்பது சிறுபான்மையினரை பாதுகாப்பதுதான் என்பது இவர்களுக்குத் தெரிந்தும், “அகண்ட ராஜ்ஜியம்” அமைக்க குறுகிய எண்ணத்துடன் வேலை செய்யும் இவர்கள் 175 முதல் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கிறார்கள்.
அப்பொழுதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, யார் யாரை விலைக்கு வாங்கலாம் என ஒரு கும்பல் செயல்களில் இறங்கியுள்ளது. இப்பொழுதே தெளிவாக தெரிகிறது.
‘ஆரியம்’ என்பது அழகான பொய்கள். ‘திராவிடம்’ என்பது நிலையான உண்மைகள். பொய்கள் ஈர்ப்பது நிலைக்காது உண்மைகள் என்றென்றும் நிலைக்கும் தந்தை பெரியாரின் கொள்கைகள் மனித சமூகத்திற்கு வாழ்நிலை! வாழ் முறை! நிரந்தர மகிழ்ச்சி தரும் கற்பக தரு!

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளோ மனித கூட்டத்தை பிரித்தாளும் சூட்சுமம் – சூட்சுமம் புரிந்தாலே சுகவாழ்வு!
மோடியின் அரசியல், தேர்தல் தோல்வி என்பது ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்தங்களின் தோல்வி! அதை விரைவில் காணப் போகும் ஆர்.எஸ்.எஸ். வலதுசாரிகள் மிகப் பெரிய வன்முறைக்கு வித்திடலாம். அதை நமது பெரியார் மண்ணில் முயற்சித்து தோற்றார்கள். இப்பொழுது இந்தியா முழுவதும் தோற்கப் போகிறார்கள். ‘சூத்திர சங்கிகளை’ காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவே கருதுகிறேன். எந்நாளும் திராவிடமே வெல்லும்! சமத்துவத்தை சொல்லும்! செயலாக்கும்!!

பூவாளூர் வி. அருணாசலம்,
நெய்வேலி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *