இட ஒதுக்கீட்டை கைவிட்டதாக காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு

Viduthalai
2 Min Read

பி.ஜே.பி. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு
கருநாடக காவல்துறை அழைப்பாணை

பெங்களூரு, மே.9- இட ஒதுக்கீடு விவகாரத் தில் காங்கிரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறி யதாக தொடரப்பட்ட வழக்கில் ஜே.பி. நட்டா விசாரணைக்கு ஆஜராக கோரி பெங்களூரு காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளனர்.

இட ஒதுக்கீடு விவகாரம்
கருநாடக பா.ஜனதா சமூக வலைத்தள பக்கத்தில் காணொலி ஒன்று வைரலானது. அதில் காங்கிரஸ் ஆட் சிக்கு வந்தால் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டை, பறித்து முஸ் லிம் சமூகத்தினருக்கு வழங்கி விடு வார்கள் என கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த கருத்துகள் தொடர்பான சித்திரங்களையும் பா.ஜனதாவினர் வெளியிட்டு இருந்தார்கள். அந்த சமூக வலைத் தள பதிவில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கருநாடக முதலமைச்சர் சித்தரா மையாவின் ஒளிப்படங்கள், வீடி யோவும் இடம் பெற்றிருந்தது.

ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பாணை
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு அய்கிரவுண்டு காவல் நிலையத்தில் பா. ஜனதா தலை வர்கள்மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி. மற்றும் எஸ். டி. பிரிவினரின் இடஒதுக்கீடு பறிக்கப் படும் என பொய்யான தகவல்களை பா.ஜனதாவினர் பரப்பி வருவதால், அவர்கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அதன் பேரில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கருநாடக மாநில பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா, சமூக வலைதளப்பிரிவு நிர்வாகி அமித் மால்வியா ஆகிய 3பேர் மீதும் கடந்த 5-ஆம் தேதி அய்கிர வுண்டு காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் விஜயேந் திரா மற்றும் அமித் மால்வியா ஆகியோருக்கு. அய்கிர வுண்டு காவல்துறையினர் அழைப் பாணை அனுப்பி வைத்துள்ளனர். இந்த அழைப்பாணை கிடைத்த 7 நாட் களுக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஜே.பி நட்டா, அமித்மால்வியாவுக்கு உத்தர விடப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *