வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

1 Min Read

சென்னை, மே 9 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப் பட்டது. தேர்தலுக்கு பயன்படுத் தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் பாது காப்பாக வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப் பதிவு இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாது காப்பு அறைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண் காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீலகிரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மய்யமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேம ராக்கள் செயலிழந்தன.

அதேபோல, ஈரோடு, விழுப் புரம் தொகுதிகளில் உள்ள பாது காப்பு அறைகளில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேமராக் களும் சிறிது நேரம் செயலிழந்தன.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேர்தல் ஆணையத் திற்கு உத்தரவிடக்கோரி வழக் குரைஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணை யம் தரப்பில் வழக்குரைஞர் நிரஞ்சன் ராஜகோபால், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள் ளது. கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்சி னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *