குஜராத், உத்தரப்பிரதேசத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்தது!

2 Min Read

புதுடில்லி, மே 9- மக்களவைத் தேர் தலின் மூன்றாம் கட்டத்தில், 2019ஆம் ஆண்டை விட,வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாம் கட்டத் தேர்த லில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் கடந்த 7-5-2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கடைசியாக கிடைத்த புள்ளி விவரங்களின்படி, வாக் குப்பதிவு 64.4 சதவிகிதமாக இருந்தது. 2019ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி களில் 67.33 சதவிகித வாக்குகள் பதி வாகின என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன. 10 தொகு திகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த போது, ​​இங்கு 57.34 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2019ஆம் ஆண்டு இதே தொகுதிகளில் 60.01 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.

குஜராத்தில் மொத்த முள்ள 26 தொகுதிகளில் 25 தொகுதி களில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலை யில், இங்கு 58.98 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. 2019 இல் குஜராத் தில் 64.5 சதவிகித வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியும், ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வும் வாக்காளர்களாக உள்ள மாநிலம் இது. காந்திநகர் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் மோடி வாக்களித்த நிலையில், அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித் தார். இருவரும் பலமுறை வந்த போதி லும், வாக்காளர்களிடம் போதிய வர வேற்பு இல்லை. அசாமில் அதிகபட்ச மாக 81.61 சதவிகித வாக்குகள் பதி வாகின. பீகாரில் அய்ந்து தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 58.18 சதவிகித வாக்குகள் பதிவாகின. பல வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்தனர்.

இறுதி அறிக்கை வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் சிறிது வித்தியாசம் இருக்கலாம். முதல் கட்டமாக 102 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றபோது 66.14 சதவீதம் வாக்குகள் பதிவாகின, 2019ஆம் ஆண்டை விட இது 4 சதவிகிதம் குறைவு. 88 இடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட தேர்தலில், 66.71 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதிலும் 2019 அய் விட சுமார் 3 சதவிகிதம் வீழ்ச்சி காணப்பட்டது. தற்போது மூன் றாம் கட்டத்திலும் 3 சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.
குஜராத்தைத் தவிர, அசாம், சத்தீஸ்கர், கோவா, கருநாடகா, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய மாநிலங்களிலும் வாக்குப்பதிவு கடந்த 7-5-2024 அன்று முடிவடைந்தது. சத்தீஸ்கர் (7 தொகுதிகள்) 71.06 சவிகிதமும், கோவாவில் (2 தொகுதிகள்) 75.20 சத விகிதமும், கருநாடகாவில் (14 தொகுதி கள்) 70.41 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *