திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விடுதலைக்கு 90 சந்தாக்கள் வழங்க முடிவு

Viduthalai
1 Min Read

திண்டுக்கல், மே 8- மிசா போன்ற அடக்குமுறை களை தாண்டி 90 ஆண்டு களை கடந்த விடுதலை நாளேட்டிற்கு 90 சந்தாக் கள் வழங்க – திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாட லில் முடிவு செய்யப்பட் டது.
திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட கழக தலைவர் மு.ஆனந்த முனிராசன் தலைமையில் அவரின் அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமை கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செய லாளர் பொறியாளர். கே..ஆர். காஞ்சித்துரை யும் முன்னிலை வகித்த னர்.

இக்கூட்டத்தில் 90 ஆண்டுகளை கடந்து , மிசா அடக்குமுறைகளை கடந்து வெற்றி நடை போடும் விடுதலை நாளேட் டிற்கு திண்டுக்கல் மாவட் டம் சார்பில் 90 சந்தா அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் தொழிலா ளர் கழக பேரவை செய லாளர். மு.நாகராசன், பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட செயலாளர் மு. செல்வம், மாநகர தலை வர். மாணிக்கம், மாநகர செயலாளர் கருணாநிதி, மதுரை மாவட்ட பொறுப் பாளர்கள் நா.முருகேசன், இரா.சுரேசு, ஆகிய தோழர்கள் கலந்து கொண் டனர்.

இக் கூட்டத்தில் தலைமை கழக அமைப் பாளர் வே.செல்வம் கலந்து கொண்டு விடுத லையின் வரலாறு. விடு தலை நாளேட்டிற்கும் ஆசிரியருக்கும் உள்ள தொடர்பு உலகிலேயே ஒரு நாளேட்டிற்கு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணியாற்றிய பெருமை தமிழர் தலை வருக்குத்தான் உண்டு என்றும், விடுதலை நாளேடு நமது கழக தோழர்கள் வீட்டிற்கு மட்டுமல்லாமல் தோழமை கருத்துக்கள் உள்ள அனைவருக்கும் விடுதலையை கொண்டு சேர்க்க வேண்டும் என்று உரையாற்றினார். நன்றி யுரை மாவட்ட செயலா ளர் காஞ்சித்துரை கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *