புதுடில்லி, மே 8- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண் பாடுகள் ஏற் படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாய மான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட் டம். தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்து வதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டு கடமையாகும்”
– இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.