பாலியல் குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணாவை துபாய் சென்று காவல்துறை கைது செய்ய முடிவு!

viduthalai
3 Min Read

பெங்களூரு, மே 8- பாலியல் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான பிரஜ்வல் ரேவண்ணா இன்றைக்குள் நாடு திரும்ப வில்லை என்றால், அவரை துபாய்க்கு சென்று பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

கருநாடக மாநிலம் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை எச்.டி.ரேவண்ண சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
இந்த பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிப் பதிவுகள் வெளியாகிய நிலை யில், அதுபற்றி கருநாடக அரசு உத்தரவின்பேரில் காவல்துறை யின் சிறப்பு புலனாய்வு குழுவி னர் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

‘புளு கார்னர்’ அறிவிக்கை

பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வழக்கு தொடரப் பட்ட நிலையில் அவருக்கு எதி ராக ‘புளூ கார்னர் அறிவிக்கை பிறப்பித்து சி.பி.அய்.உத்தர விட்டுள்ளது.
அதையடுத்து பன்னாட்டு காவல்துறையினரின் உதவியு டன் அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஓரிரு நாள்களில் பிரஜ்வல் ரேவண்ணா துபாயில் இருந்து கருநாடகத்துக்கு வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இந்த நிலை யில் அவர் தற்போது நேற்று (7.5.2024) கருநாடகத்துக்கு வர இருந்ததாக தகவல்கள் வெளி யாகி உள்ளன.
மேலும் அவர் துபாயில் தற்போது தங்கி இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்து இருப்பதாகவும் கூறப் படுகிறது.

சித்தராமையா ஆலோசனை

இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கு சம்பந்தமாக முதலமைச்சர் சித்தராமையா, மாநில காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அதி காரிகளுடன் பெங்களூருவில் நேற்று முன்தினம் (6.5.2024) ஆலோசனை நடத்தினார்.
“அப்போது காவல்துறை அதிகாரிகள், பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் இதுவரை நடந்த விசாரணை பற்றிய தகவல் களை தெரிவித்தனர்.

வெளிநாடு செல்ல திட்டம்

அடுத்த ஓரிரு நாட்களில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் வெளி நாடு செல்ல திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது.
அந்த குழுவில் 8 உயர் காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்று இருப்பதாகவும், அவர்கள் துபாய்க்கு சென்று அந்நாட்டின் உள்ளூர் காவல் துறையினர் உதவியுடன் பிரஜ் வல் ரேவண்ணாவை கைது செய்து நாடு கடத்தி வரு வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

6 மணி நேரம் சோதனை

இந்தநிலையில் நேற்று முன் தினம் (6.5.2024) ஒலே நரசிப் புரா டவுன் காவல்நிலையத்தில் தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்த தாக கூறி புகார் அளித்திருந்த பெண், சிறப்புப் புலனாய்வு குழுவினரிடம் மேலும் ஒரு தகவலை தெரிவித்தார்.
அதாவது அவர் தன்னை பெங்களூருவில் உள்ள ரேவண் ணாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக கூறி னார்.
இதையடுத்து ரேவண்ணா வுக்கு சொந்தமான பெங்களூரு வில் உள்ள வீட்டில் காவல் துறை சிறப்பு குழுவினர் 6 மணி நேரம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தேவேகவுடா, குமாரசாமியின் பெயர்களை பயன்படுத்தத் தடை
பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

மேனாள் பிரதமர் தேவே கவுடாவின் மூத்த மகன்தான் எச்.டி.ரேவண்ணா என்பதும், பேரன் பிரஜ்வல் ரேவண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் எச்.டி.ரேவண்ணா வின் சகோதரர்தான் மேனாள் முதலமைச்சர் குமாரசாமி ஆவார்.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் மேனாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் குமாரசாமியின் பெயர்களும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இதையடுத்து தங்களது பெயர்களை பயன்படுத்த தடை விதிக்க கோரி பெங்களூரு செசன்சு நீதிமன்றத்தில், தேவே கவுடா மற்றும் குமாரசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, பிரஜ்வல் ரேவண்ணா சம்பந் தப்பட்ட வழக்கில் தேவே கவுடா மற்றும் குமாரசாமியின் பெயர்களை அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *