செய்திச் சுருக்கம்

1 Min Read

மழை

தென்னிந்தியப் பகுதிகளில் மேல் வளிமண் டல கீழடுக்குகளில் காற் றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 14 இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

உயர்வு

சென்னையில் இது வரை இல்லாத வகையில் 4,590 மெகாவாட் மின் தேவை உயர்ந்துள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சபட்ச மின் நுகர்வு 97.77 மில்லியன் யூனிட் டாக பதிவாகியுள்ளது.

ரத்து

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடை முறை அமலுக்கு வந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து உள் ளது. தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்த சுற்று லாப் பயணிகள் ரத்து செய்து வருகின்றனர்.

மூடப்பட்டது

கடலில் சீற்றம் தொடர் வதால், குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பய ணிகள் கடற்கரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேர் பலியான லெமூர் கடற்கரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாராட்டு…

கஞ்சா கடத்தல் வழக் கில் கடந்த மூன்று ஆண் டுகளில் வட மாநிலங் களைச் சேர்ந்த 2,486 பேரை கைது செய்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித் துள்ளது.

காய்ச்சல்

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 10 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டதில் ஒருவரின் உடல்நிலை கவ லைக்கிடமாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *