ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டு மானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப்பூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ, தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான், அனுபவிக் கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும், மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்திக் கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் – நியாய விரோதமாய்க் கட்டுத் திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டியவனாகலாம். புதிய பகுத்தறிவு உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும், தனிப்பட்டவர் மனக்குறைவுக்கும், ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடம் இருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1313)

Leave a Comment