திருமருகல், மே 8- நாகை மாவட்டம், திரு மருகல் ஒன்றிய கழக சார்பில் மருங்கூர் கடைவீதியில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு தெரு முனைப் பிரச்சாரக் கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய தலைவர் மு.சின்னதுரை தலைமையில் மருங்கூர் திராவிடர் கழக தோழர்கள் காமராஜ், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மருங் கூர் வி.ஆர்.அறிவுமணி வரவேற்புரை யாற்றினார்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக .பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் மு.இளமாறன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்.
கழகப் பேச்சாளர்கள் வழக்குரைஞர் சிங்காரவேலர், தே.நர்மதா ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாவட்ட து. தலைவர் பொன்.செல்வராசு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் இராச. முருகையன், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ் மோகன், மாவட்ட மாணவர் கழக தலை வர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணி து.தலைவர் கி. சுரேஷ், மாவட்ட இளை ஞரணி து. செயலாளர் பாக்கியராஜ், பகுத் தறிவாளர் கழக தங்கையன், மருங்கூர் சவுமியா, இளமாறன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்களும் கிராம பொதுமக் களும் பங்கேற்று சிறப்பித்தனர்.
கூட்டத்தில் திராவிடர் கழக மகளிர் அணி தோழர் மணிமொழி நன்றி கூறி னார். எழுச்சியுடன் நடைபெற்ற கூட்டம் 9 மணி அளவில் நிறைவடைந்தது.