காணொலிமூலம் சோனியா வேண்டுகோள்
புதுடில்லி, மே 8- மக்களவைத் தேர் தலுக்கான 3 ஆவது கட்ட வாக்குப் பதிவு நேற்று (7-5-2024) நடை பெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று நாட்டின் ஒவ்வொரு மூலை யிலும் இளைஞர்கள் வேலையின் மையை எதிர் கொண்டு வருகின்றனர். பெண்கள் பாலியல் கொடுமைகளை சந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள் மிக மோச மான பாகுபாட்டை எதிர்கொள்கின் றனர்.
பிரதமர் நரேந்திர மோடியாலும் பாஜகவாலும் உருவாக்கப்பட்ட சூழல் இது. என்ன விலை கொடுத்தாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியில் அவர்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர். தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக வெறுப் பையும் பொய்யையும் பரப்புகின்றனர்.
நம்முடைய அரசமைப்பும், ஜன நாயகமும் கடும் நெருக்கடியில் இருக் கின்றன. நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் சிதறுண்டுள்ளது. ஏழைகள் தனித்து விடப்பட்டுள்ளனர். இந்தச் சூழலை மாற்ற உங்களின் ஆதரவை கோரு கிறேன்.
காங்கிரஸ் கட்சி நாட்டின் முன்னேற் றத்துக்காகவும் நீதிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறது.
சமத்துவமிக்க வளமான எதிர்காலத் துக்கு காங்கிரசுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.